காரைக்கால் மக்களிடம் செப்டம்பர் 27-ஆம் தேதி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் குறை கேட்கவுள்ளார் என மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறை கேட்கும் நிகழ்வு செப்டம்பர் 27-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு காணலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோர், குறை கேட்பு நாளன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.