திருநள்ளாறில் இன்று மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

திருநள்ளாறில் புதன்கிழமை (செப்டம்பர் 25) ஒற்றை விளக்கு இணைப்பு வைத்திருப்பவர்களுக்கான  சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

திருநள்ளாறில் புதன்கிழமை (செப்டம்பர் 25) ஒற்றை விளக்கு இணைப்பு வைத்திருப்பவர்களுக்கான  சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மின்துறை உதவிப் பொறியாளர் (கிராம உட்கோட்டம்) அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மின்துறை திருநள்ளாறு பிரிவுக்குள்பட்ட அம்பேத்கர் நகர், அத்திப்படுகை, பேட்டை, தென்னங்குடி மற்றும் செல்லூர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக இருந்துவரும் ஒரு குடிசை, ஒரு விளக்கு மின் இணைப்புகளில், அரசால் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக மின்சுமையை பயன்படுத்திய மின் இணைப்புகளை, வீட்டு உபயோக மின் இணைப்பாக மாற்றுவதற்கான சிறப்பு முகாம் செப்டம்பர் 25-ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.
திருநள்ளாறில் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே பயனீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு, மின்துறை அலுவலர்களால் முறையாக பரிசீலனை செய்து, மின்சுமைக்கு ஏற்ப மின் இணைப்புக்கான கட்டணம் பெறப்பட்டவுடன், ஒரு மணி நேரத்துக்குள் மின்மீட்டர் பொருத்தப்பட்டு இணைப்பு வழங்கப்படவுள்ளது. எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் ஒரு குடிசை, ஒரு விளக்குத் திட்டத்தினர், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஒரே நாளில் வீட்டு உபயோக மின் இணைப்பை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com