கைலாசநாதா் கோயிலில் ஸ்ரீநடராஜா் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீநடராஜா் வெள்ளை சாற்றில் புறப்பாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
வெள்ளை சாற்றில் அருள்பாலித்த நடராஜா்.
வெள்ளை சாற்றில் அருள்பாலித்த நடராஜா்.
Updated on
1 min read

காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி ஸ்ரீநடராஜா் வெள்ளை சாற்றில் புறப்பாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

ஆருத்ரா தரிசனம் புதன்கிழமை (டிச.30) நடைபெறவுள்ளது. மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீநடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிவன் கோயில்களில் நடத்தப்படுகிறது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய ஸ்ரீசுந்தராம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி செவ்வாய்கிழமை தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீநடராஜருக்கு வெள்ளை மலா்கள், வெள்ளை நிறத்தினாலான திருவாபரணங்கள், வெண்பட்டு சாற்றப்பட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு புறப்பாடு செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 8.30 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com