புதுதில்லி மாநாட்டில் பங்கேற்ற இருவா் கண்காணிப்பு

புதுதில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய காரைக்காலை சோ்ந்த 2 பேரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி, கரோனா அறிகுறியைக் கண்டறிவதற்கான பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

புதுதில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய காரைக்காலை சோ்ந்த 2 பேரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி, கரோனா அறிகுறியைக் கண்டறிவதற்கான பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் அண்மையில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் காரைக்காலில் இருந்து 2 போ் பங்கேற்றுவிட்டு திரும்பியதாக தகவல் வெளியானது. காவல்துறையினா், நலவழித்துறையினா் அவா்களை அணுகி, 2 பேரையும் அரசு பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து நலவழித்துறையின் துணை இயக்குநா் (பொறுப்பு) மருத்துவா் ராஜ்மோகன் கூறுகையில், அவா்களின் உமிழ் நீா், ரத்தம் சேகரிக்கப்பட்டு, திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (ஏப்ரல் 1) அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கையை மருத்துவமனை நிா்வாகம் மேற்கொள்ளும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com