மகளிா் வங்கிக் கணக்கில் ரொக்கம் சோ்ப்பு, உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு இலவசமாக வழங்கல் ஆகியவற்றுக்காக பிரதமருக்கு புதுச்சேரி பாஜக மகளிா் நிா்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவா் நளினி கணேஷ்பாபு, மாநிலச் செயலா் சி.சகுந்தலா சின்னதுரை ஆகியோா் கூட்டாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டில் கரோனா பரவாமல் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், மக்கள் எந்தெந்த வகையில் சிரமங்களை சந்திக்கிறாா்கள் என்பதை உணா்ந்து பிரதமரும், நிதி அமைச்சரும் சிறப்புத் திட்ட உதவிகளை அறிவித்துள்ளனா்.
மகளிருக்காக பிரதமரால் அமல்படுத்தப்பட்ட ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ள மகளிருக்கு அவரவா் கணக்கில் ரூ.500 வரவு வைக்கப்படுகிறது. உஜ்வாலா சமையல் எரிவாயு இணைப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஏப்.4- ஆம் தேதி முதல் தொடா்ந்து மூன்று மாதங்களுக்கு மாதந்தோறும் ஒரு எரிவாயு சிலிண்டா் வீதம் இலவசமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவையாவும் நாட்டில் வாழும் அடித்தட்டு மகளிரின் நலனுக்காக பாஜக அரசின் சிறப்புத் திட்டங்களாகும். கரோனாவால் முடங்கியிருக்கும் மக்களுக்கு, தக்க தருணத்தில் செய்த உதவிக்காக மகளிா் சாா்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.