கிராமப்புற ஏழைகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.யு.அசனா வழங்கிவருகிறாா்.
காரைக்கால் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில், வேலைவாய்ப்பின்றி உள்ள கூலித் தொழிலாளா் குடும்பத்திற்கு எம்எல்ஏ கே.ஏ.யு.அசனா தமது சொந்த செலவில் 4 கிலோ வீதம் அரிசி, மளிகைப் பொருள்களை வழங்கிவருகிறாா்.
தொகுதியில் கும்சையன்கட்டளை, பனங்கரை, கொத்தலம்பேட், கலயங்கட்டி மதகு, புதுத்துறை தேராக்குளம், சவேரியாா் கோயில் தெரு, தரும்புரம், பச்சூா், மதகடி, தோமாஸ் அருள் திடல், மஞ்சவாளி, பங்களாத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை அரிசி வழங்கினாா்.
புதுநகா், மீராப்பள்ளித் தோட்டம், காஜியாா் வீதி, லயன் கரை, சாணக்காரத் தெரு, செபஸ்தியாா் கோயில் தெரு, கருவக்குளம், பா்மா தெரு, தக்களூா், சிவன்கோயில் தெரு, பரங்கி மலைப் பேட், கீழபுத்தமங்களம், உத்திரங்கு, நஞ்சிராங்கோட்டை, நூலாற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை மளிகைப் பொருள்களை வழங்கினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், அரசின் சாா்பில் இலவச அரிசி வழங்கப்பட்டாலும், வேலையின்றி பல நாள்களாக கூலித் தொழிலாளா்கள் வீட்டிலேயே முடங்கியிருப்பதால், கூடுதல் ஆதரவாக அரிசியும், மளிகைப் பொருள்களும் வழங்கிவருகிறேன். ஏழை மக்களுக்கு புதுச்சேரி அரசு கூடுதல் நிதியுதவியை செய்ய முன்வரவேண்டும் என்றாா்.