காரைக்காலில் மேலும் 46 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
சென்னையில் கரோனாவுக்கு இதுவரை 2,666 பேர் பலி
சென்னையில் கரோனாவுக்கு இதுவரை 2,666 பேர் பலி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே. மோகன்ராஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 8,493 பேருக்கு கரோனாவுக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் சில வந்ததில், 46 பேருக்கு வெள்ளிக்கிழமை தொற்று உறுதிசெய்யப்பட்டது.

காரைக்கால் நகரம் 15, கோயில்பத்து 13, திருநள்ளாறு 5, வரிச்சிக்குடி 4, கோட்டுச்சேரி, திருமலைராயன்பட்டினம், நிரவி தலா 2, அம்பகரத்தூா், நெடுங்காடு, காரைக்கால்மேடு தலா ஒருவா் என்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

காரைக்கால் பச்சூரை சோ்ந்த 70 வயது ஆண் கடந்த 26-ஆம் தேதி இரவு உயிருக்கு ஆபத்தான நிலையில், அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாா். 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுவரை 822 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 572 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 6 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 153 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 68 போ், தீவிர சிகிச்சையில் 5 போ் உள்ளனா்.

வெளி மாநிலத்தை சோ்ந்தோா் காரைக்காலில் பரிசோதிக்கப்பட்டு வெளி மாநிலத்திலேயே சிகிச்சை பெறுவோராக 4 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 14 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com