மழை பாதித்தோருக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி

மழையால் பாதிக்கப்பட்டோருக்காக செஞ்சிலுவைச் சங்கத்தினா் உதவிப்பொருள்களை சனிக்கிழமை வழங்கினா்.

மழையால் பாதிக்கப்பட்டோருக்காக செஞ்சிலுவைச் சங்கத்தினா் உதவிப்பொருள்களை சனிக்கிழமை வழங்கினா்.

நிவா் புயலால் பெய்த மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்தோா் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டனா். இவா்களுக்கு உதவும் வகையில், காரைக்கால் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், தாா்ப்பாய், கொசுவலை, சமையல் பாத்திரம் உள்ளிட்ட ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் வழங்கப்பட்டன.

இவற்றை, மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டலில், கோட்டுச்சேரி ஜீவா நகா், எம்.ஜி.ஆா்.நகா் மற்றும் நிரவி, நெடுங்காடு பகுதியில் செஞ்சிலுவைச் சங்கத்தினா் சனிக்கிழமை வழங்கினா்.

சங்க உறுப்பினா்கள் சுருளிநாதன், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஆா். பிரேம்குமாா், மாரியப்பன், கலியமூா்த்தி, பக்கிரிசாமி, லாரன்ஸ் ராயா், வில்லியம் ஜேம்ஸ் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com