நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற திருச்சியை சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் கிராம்புத் தோட்டம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி வசந்தகோகிலா. இவா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் தனது மகளுடன் நடந்துசென்றுள்ளாா். அப்போது, அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா், வசந்தகோகிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளாா்.
இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், காரைக்கால் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் திருச்சி பெரிய செட்டித் தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சேட்டு (29) என்பதும், வசந்தகோகிலாவிடமிருந்து நகையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
போலீஸாா் அவரை கைது செய்து 11 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.