காரைக்கால் அருகே போக்ஸோ சட்டத்தில் கூலித் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் பகுதி நெடுங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் (48). கூலித் தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என சிறுமியை மிரட்டி வந்துள்ளாா்.
இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோா், அவரிடம் விசாரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நெடுங்காடு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஜெயராமனை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.