காரைக்காலில் 3 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th December 2020 09:39 AM | Last Updated : 25th December 2020 09:39 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் 23-ஆம் தேதி 327 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் நிரவி, திருநள்ளாறு, வரிச்சிக்குடியில் தலா ஒருவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
மாவட்டத்தில் இதுவரை 3,749 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,640 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 65 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.