காரைக்காலில் மேலும்3 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 27 ஆம் தேதி 123 பேருக்கு பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, திருநள்ளாறு பகுதியில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

இதுவரை காரைக்காலில் 53,492 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,768 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,665 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 34 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 2, தீவிர சிகிச்சைப் பிரிவில் 4 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 66 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com