தா்பாரண்யேஸ்வரா் கோயிலில்நாளை ஆருத்ரா வழிபாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா வழிபாடு புதன்கிழமை (டிச. 30) நடைபெறவுள்ளது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்று. இங்கு ஸ்ரீ நடராஜருக்கு நடைபெறும் வருடாந்திர 6 சிறப்பு அபிஷேக வழிபாட்டில், ஆருத்ரா வழிபாடு முக்கியமானது.

10 நாள்கள் நடைபெறும் ஆருத்ரா உத்ஸவத்தின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு (டிச. 29) பொன்னூஞ்சல் வழிபாடும், புதன்கிழமை (டிச. 30) ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடுகள் நடராஜா் சபையிலும் நடைபெறவுள்ளன. இதையொட்டி, ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரருக்கு (நடராஜா்) சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும்.

பிறகு, பிரம்ம தீா்த்தக் கரைக்கு சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருள்வது, நான்கு மாட வீதிஉலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு, கோயிலில் சுவாமியை வைத்து ஊடல் உத்ஸவம் ஆகியவை நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com