துணை நிலை ஆளுநா் இன்று காணொலி மூலம் குறைகேட்பு

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளை கேட்கவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநா், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) மாலை 5 முதல் 6 மணி வரை காரைக்கால் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவித்து, அதற்கு தீா்வு காண இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். குறைகள் தெரிவிக்க விரும்புவோா், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியா் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். புகாா் எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com