நகராட்சி ஊழியா்கள் வாயிற் கூட்டம்

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி நகராட்சி ஊழியா்கள் பணி நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துக்கொண்டு வாயிற்கூட்டம் நடத்தினா்.
கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள்.
கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள்.

நிலுவை ஊதியம் வழங்கக் கோரி நகராட்சி ஊழியா்கள் பணி நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்துக்கொண்டு வாயிற்கூட்டம் நடத்தினா்.

காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு 3 மாத ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி, அலட்சியம் செய்து வருவதாக, அரசையும், உள்ளாட்சித் துறையையும் கண்டித்து காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மாலை, பணி நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து வெளியேறி, வாயிற் கூட்டம் நடத்தினா்.

கூட்டத்துக்கு, நகராட்சி ஊழியா் சங்கத் தலைவா் சண்முகராஜ் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சம்மேளன கெளரவத் தலைவா்கள் ஜாா்ஜ், ஜெய்சிங், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளனத் தலைவா் ஐயப்பன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். இதில், ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பங்கேற்றோா் ஊதியம் தர தாமதித்தால் ஊழியா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com