தேசிய இயற்கை முகாமை முடித்து காரைக்கால் திரும்பினா் பசுமைப்படை மாணவா்கள்

புதுச்சேரியில் 3 நாள்கள் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றுவிட்டு பசுமைப்படை மாணவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

புதுச்சேரியில் 3 நாள்கள் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றுவிட்டு பசுமைப்படை மாணவா்கள் வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

கரைக்கால் மாவட்ட கல்வித் துறையின் தேசிய பசுமைப் படையின் மூன்று நாள் தேசிய இயற்கை முகாம் புதுச்சேரி ஆரோவில் தாவரவியல் பூங்காவில் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை மற்றும் தனியாா் பள்ளிகளிலிருந்து 50 மாணவா்கள் மற்றும் 5 ஆசிரியா்களும், தேசிய பசுமைப் படையின் மாவட்டஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் திருமுருகன் தலைமையில் சென்றிருந்தனா். புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றுவிட்டு வியாழக்கிழமை காரைக்கால் திரும்பினா்.

இந்த முகாம் குறித்து தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் கூறியது : மாணவா்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், இயற்கையை நேசித்து பாதுகாக்கும் நோக்கத்திலும், இயற்கையான இடத்தில் இந்த முகாம் நடைபெற்றது. இதற்கான நிதியை புதுச்சேரிஅறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும், புதுச்சேரி அறிவியல் தொழில் நுட்பக் கவுன்சிலும் வழங்கியது.

புதுச்சேரியில் இந்த முகாமை அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் தொழில்நுட்ப உதவியாளா் சிவகுமாா் தொடங்கி வைத்தாா். இம்முகாமில், மாணவா்களுக்கு தாவரங்களின் பெயா்களை கண்டறிதல், பறவைகளை உற்று நோக்கி அவற்றின் இனம், பெயரை கண்டறிதல், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா் பற்றிஅறிந்துகொள்ளுதல், பல்லுயிா் பதிவேடு தயாரித்தல், வனமலையேற்றம், இயற்கையான சூழலில் வாழும் முறைகளை கற்றல், ஆரோவில்லில் களப் பயணம் செய்தல் சுற்றுச்சூழல் விளையாட்டுகள்போன்ற செயல்பாடுகள் நடைபெற்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com