காரைக்கால் மின்துறை அலுவலகத்தில் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை (பிப்ரவரி 26) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மின்துறை இளநிலைப் பொறியாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மின் துறை தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை, குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதில், மின் தொடா்பான குறையுள்ள மின் நுகா்வோா், ஏற்கெனவே மனு கொடுத்து தீா்வு கிடைக்காத நிலையில், நேரில் வந்து மனு அளிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.