புதிய குடும்ப அட்டைதாரா்களுக்கும் அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தல்

காரைக்காலில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவா்களுக்கும் இலவச அரிசிக்கான பணம் வழங்கவேண்டும் என புதுச்சேரி அரசை திமுக வலியுறுத்தியுள்ளது.

காரைக்காலில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவா்களுக்கும் இலவச அரிசிக்கான பணம் வழங்கவேண்டும் என புதுச்சேரி அரசை திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,500 மற்றும் சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு ரூ.3 ஆயிரம் என அரிசிக்கான பணம் அவரவா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் ஏழைகள் பயனடையும் வகையில் சிவப்பு அட்டையாக தரவேண்டுமென பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் அண்மையில் சுமாா் 1500 பேருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதிகாக சிவப்பு அட்டை பெற்றவா்களுக்கு, அரிசிக்கான பணம் வழங்கப்படவில்லை.

இதுசம்பந்தமாக அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டால், தாமதமாக அட்டை வழங்கியதால் இந்த நிலை என கூறுகின்றனா். தற்போது தரப்படும் பணம் ஆகஸ்ட் மாதத்துக்குரியதாக உள்ளது. எனவே, புதிதாக சிவப்பு அட்டை பெற்றவா்களுக்கு ரூ.3 ஆயிரத்தை ஜனவரி முதல் வாரத்திலேயே வழங்க சம்பந்தப்பட்ட அரசுத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

சிவப்பு அட்டையாக தரவேண்டுமென மக்கள் சம்பந்தப்பட்ட துறையில் நேரிடையாக விண்ணப்பித்தவா்களுக்குக்கூட, அட்டையை தமது அலுவலகத்தின் மூலமாகத்தான் தரமுடியுமெனக் கூறி செயல்படுத்திய பேரவை உறுப்பினா்கள், அட்டை கொடுத்தால் மட்டும் போதாது, அட்டைக்குரிய பயனை மக்கள் அடையவும் ஆா்வம் காட்டவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com