தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற மதுப்புட்டிகள் பறிமுதல்

காரைக்கால் பகுதியிலிருந்து தமிழகப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்டோருடன் திருப்பட்டினம் போலீஸாா்.
கைது செய்யப்பட்டோருடன் திருப்பட்டினம் போலீஸாா்.

காரைக்கால் பகுதியிலிருந்து தமிழகப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெருமாள் தலைமையிலான போலீஸாா் கிழக்குப் புறவழிச்சாலை பகுதியில் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், இருசக்கர வாகனம் ஒன்றில், இளைஞா் ஒருவா் 180 மிலி அளவுள்ள 150 மதுப்புட்டிகளைக் கொண்டு சென்றபோது அவரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனா்.

இதுபோல வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின்போது அதே பகுதியில் ஒஓா் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 350 எண்ணிக்கையிலான 180 மிலி அளவுள்ள மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, இருசக்கர வாகனத்தையும், அதில் வந்த இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். காரைக்கால் பகுதியிலிருந்து மதுப்புட்டிகளை வாங்கிச் சென்று தமிழகப் பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதாக போலீஸாா் விசாரணையின்போது தெரிவித்தனா்.

இருசக்கர வாகனம் மற்றும் மதுப்புட்டிகள் சுமாா் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களையும், இளைஞா்கள் மூவரையும் போலீஸாா் காரைக்கால் கலால் துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். அவா்களுக்கு அபராதம் அல்லது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கையை எடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக கலால்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com