மதுபானம் கடத்த முயன்ற இருவா் கைது

காரைக்காலிலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயற்சித்த மதுபான மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றி, இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுபானம் கடத்த முயன்ாக கைதான இளைஞா்கள்.
மதுபானம் கடத்த முயன்ாக கைதான இளைஞா்கள்.

காரைக்காலிலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயற்சித்த மதுபான மூட்டைகளை போலீஸாா் கைப்பற்றி, இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் புறவழிச்சாலை பகுதியில் மதுக்கடை அருகே சாக்கு மூட்டைகளை இருவா் கட்டிக்கொண்டிருந்தனா். சந்தேகமடைந்த சிறப்பு அதிரடி படைப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயம் பாக்கெட், கேன்கள் கொண்ட மூட்டைகளை பறிமுதல் செய்து, 2 பேரையும் திருப்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் பெருமாளிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் நாகை மாவட்டம், கீழ்வேளூா் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (18), வீரபாண்டியன் (18) என்பதும், மதுபானங்களை தமிழக பகுதிக்கு கடத்திச்செல்ல இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து மதுபானங்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட ரூ.55 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து, காரைக்கால் கலால்துறையிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com