அரசு கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சோ்க்கை கமிட்டி ஒருங்கிணைப்பாளா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலைப் பாடப் பிரிவுகளுக்கு சோ்க்கை நடைபெறவுள்ளன. புதுச்சேரி உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணனின் அறிவுறுத்தலின்படி, மாணவ, மாணவிகள்  இணையதளத்துக்கு சென்று விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து, அதை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களை இணைத்து, காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள  அலுவலகத்தில் சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. காரைக்கால் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவா்கள், பள்ளி நிா்வாகத்தை அணுகி விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இளங்கலை படிப்புக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com