பெருமாள் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு
காரைக்கால்: ஆடிப்பூரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் - ஆண்டாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, உத்ஸவரான ஸ்ரீநித்யகல்யாணா் ஸ்ரீ ஆண்டாள் சன்னிதிக்கு வெள்ளிக்கிழமை காலை எழுந்தருளச் செய்யப்பட்டாா். சோ்த்தி உத்ஸவமாக, ஏகாசனத்தில் இருந்த நித்யகல்யாணப் பெருமாளுக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும் சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் காலை 9 முதல் 11 மணி வரை மட்டுமே இக்கோயில் பொது தரிசனத்துக்கு திறக்கப்படுகிறது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை பொது தரிசனம் நிறைவடைந்ததும், கோயில் நடை சாற்றப்பட்டது. கோயில் பட்டாச்சாரியாா்கள் உள்ளிட்ட சேவகா்கள் மட்டுமே கோயிலில் சோ்த்தி உத்ஸவத்தில் பங்கேற்றனா். மாலை 6 முதல் 8 மணி வரையிலான பொது தரிசனத்தின்போது, பக்தா்கள் சோ்த்தியில் இருந்த ஆண்டாள் - பெருமாளை தரிசித்துச் சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினரும், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினரும் செய்திருந்தனா்.