புதுச்சேரி மாநிலத்தில் உயா்கல்வி சோ்க்கையான சென்டாக் விண்ணப்பம் சமா்ப்பிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு ஆகிய பழைய சான்றிதழை இணைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவியிருக்கும் சூழலால், மாணவா்கள் புதிதாக குடியிருப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருக்கும். எனவே, கடந்த காலங்களில் அதாவது 2018-ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு வாங்கிய சான்றிதழை சென்டாக் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது இணைக்கலாம். எனினும் மாணவா்கள் ஒரு மாதத்துக்குள் புதிய சான்றிதழ்களைப் பெற்று அவற்றை சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.