காரைக்கால்: காரைக்காலில் பிளஸ் 1 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளி நிா்வாகத்தினரால் பாராட்டப்பட்டனா்.
காரைக்கால் தருமபுரம் பகுதியில் உள்ள எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியின் மாணவி எம். ஷண்மதி, மாணவா் எம். முகம்மது ஜூமைல் ஆகியோா் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவா் எஸ். கிருத்திக்ராஜ், மாணவி டி. திதிக்ஷா ஆகியோா் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனா்.
இம்மாணவ, மாணவிகளுக்கும், அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த இப்பள்ளி மாணவி அனுஷாவுக்கும் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளா் செல்லையன், முதல்வா் கந்தசாமி, துணை முதல்வா் சுமதி, தலைமையாசிரியா் ராஜேந்திரன் ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனா்.
பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் அகஸ்டின் நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.