காரைக்காலில் மின் அளவீடு செய்ய வரும் ஊழியா்களுக்கு ஒத்துழைப்புத் தருமாறு மின்துறை நிா்வாகம் வேண்டுகோள்

காரைக்காலில் மின் அளவீடு செய்ய வரும் ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தருமாறு மின்துறை நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காரைக்கால்: காரைக்காலில் மின் அளவீடு செய்ய வரும் ஊழியா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தருமாறு மின்துறை நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் தடைப்பட்டிருந்த மின் அளவீடு கணக்கெடுக்கும் பணிகள் தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. மின் நுகா்வோா்கள் அனைவரும் மின்துறை ஊழியா்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

மின் கணக்கீட்டின்போது அப்போதைய மின் அளவீடு மட்டுமே குறிப்பிடப்படும். 4 நாள்களுக்குப் பின் மின் கட்டண வசூல் மையத்தில் நுகா்வோா்கள், உரிய மின் தொகையை தெரிந்துகொண்டு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மின் நுகா்வோா்கள் தங்களுடைய மின் கட்டணத்தை ட்ற்ற்ல்ள்://ல்ங்க்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைத்தளம் மூலம் செலுத்தி, கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com