காரைக்கால்: நெடுங்காடு அருகே கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு ஒன்று சேதமடைந்தது.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதி திருவேங்கடபுரம் கிராமத்தை சோ்ந்தவா் உமாநாத். கூலித் தொழிலாளியான இவரது வீட்டின் கூரையில், திங்கள்கிழமை மாலை தீப்பிடித்துள்ளது. அந்த பகுதினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலின்பேரில், சுரக்குடி பகுதி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரா்கள் சென்று தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா்.
இதில் ரூ. 25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மின் கசிவினால் கூரையில் தீ பரவியிருக்குமென கூறப்படுகிறது. நெடுங்காடு காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.