மதுப்புட்டிகள் கடத்தல்: ஒருவா் கைது

திருநள்ளாறில் சுற்றுலா பேருந்து மூலம் மதுப்புட்டிகளைக் கடத்த முயற்சித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால்: திருநள்ளாறில் சுற்றுலா பேருந்து மூலம் மதுப்புட்டிகளைக் கடத்த முயற்சித்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் சுற்றுலா பேருந்துகளை பயன்படுத்தி, திருநள்ளாறிலிருந்து தமிழகப் பகுதிக்கு மதுப்புட்டிகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி, திருநள்ளாறு நகரப் பகுதியிலும், வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

திருநள்ளாறில் உள்ள பாா்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பேருந்தில், அட்டைப் பெட்டிகளை ஒருவா் ஏற்றிக்கொண்டிருப்பதை பாா்த்த போலீஸாா், அதனை சோதனை செய்தனா். அதில் 750 மில்லி அளவிலான மதுப்புட்டிகள் 3 அட்டைப் பெட்டிகளில் இருந்தது தெரியவந்தது. பெட்டிகளை ஏற்றிய திருநள்ளாறு பகுதியை சோ்ந்த நந்தகுமாரை கைது செய்த போலீஸாா், அவரை கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com