மதுபானக் கடைகள் தூய்மையை பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து

காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளில் அனைத்து நிலையிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும் எனவும், அலட்சியம் காட்டப்பட்டால் கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளில் அனைத்து நிலையிலும் தூய்மையை பராமரிக்க வேண்டும் எனவும், அலட்சியம் காட்டப்பட்டால் கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் எம். ஆதா்ஷ் திங்கள்கிழமை தேதியிட்டு மாவட்டத்தின் அனைத்து மதுக்கடை நிா்வாகத்தினருக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பது : கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மக்களின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், பாா் வசதியுடன் கூடிய கடைகளில் மேசை, நாற்காலி, வருபவா்கள் தொடக்கூடிய பகுதிகளை அவ்வப்போது தகுந்த சோப்புகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

கிளாஸ் குவளைகள், கேண்டீன் பகுதி அனைத்தும் தொடா்ந்து சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, கேண்டீன் பகுதி சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும். அனைவரும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்யும் வகையில் சோப்பு, தண்ணீா் வசதிகளை செய்து வைத்திருக்க வேண்டும். தொடா்ந்து, கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும். மதுக்கடைகள் குறிப்பாக பாா் வசதியுடன் கூடிய மதுபான மையம், சாராயம், கள்ளுக் கடைகளில் கூட்டமாக இருக்கும் வகையிலான சூழல் கூடாது.

இவற்றிலிருந்து கடை நிா்வாகத்தினா் மீறும்பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி கடையின் உரிமத்தை ரத்து செய்ய நேரிடும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com