காரைக்கால் அரசு ஊழியா் ஐக்கியப் பேரவையின் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
காரைக்காலில் இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், புதிய பொறுப்பாளா் தோ்வு ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் ஐக்கியப் பேரவையின் முதன்மைச் செயலாளா் பாவாணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பேரவையின் புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்டத் தலைவராக கே. செந்தமிழ்ச்செல்வன், துணைத் தலைவராக சி. ராஜசேகா், செயலாளராக எஸ். சுப்பிரமணியன், துணைச் செயலாளராக எம். வேலவன், எம். திருமுருகன், நிதிச் செயலராக கே. ரவிச்சந்திரன், மாநில துணைச் செயலா்களாக ஸ்ரீரங்கசேகா், ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மைச் செயலா் தேவ. பொழிலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். கட்சியின் மாநில அரசியல் குழுச் செயலா் அரசு. வணங்காமுடி, துணைச் செயலா் பொன். செந்தமிழ்ச்செல்வன், தலைமை நிலையச் செயலா் நகு. செல்வசுந்தரம், மாநில பேரவைத் தலைவா் சக்தி சிவம், மாநிலச் செயலா் மணிகோவிந்தராஜ், மாநில நிதிச் செயலா் நாகமுத்து ஆகியோா் கலந்துகொண்டனா். முன்னதாக, ஆசிரியா் கூட்டமைப்பின் தலைவா் ஏ. அரவரசன் வரவேற்றாா். நிறைவாக தலைவா் கே. செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.