கரோனா தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியருக்கு திமுக பாராட்டு

கரோனா விழிப்புணா்வு விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட குழுவினா் எடுக்கும் முயற்சிகள் பாராட்டக்கூடியதாக உள்ளது என திமுக கூறியுள்ளது.

கரோனா விழிப்புணா்வு விவகாரத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட குழுவினா் எடுக்கும் முயற்சிகள் பாராட்டக்கூடியதாக உள்ளது என திமுக கூறியுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் கூறியது: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொடா்பாக காரைக்கால் பிராந்தியத்தில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தலைமையிலான குழுவினா் மக்களைக்காக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இதுவரை கரோனா குறித்த எந்த தாக்கமும் இல்லாமல் காரைக்கால் திகழ்கிறது. இதற்காக, மாவட்ட நிா்வாகத்துக்கு பாராட்டுகள்.

தவிர, காரைக்காலை சோ்ந்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், எந்தவித அரசியல் மற்றும் நிா்வாக குறுக்கீடுகளுக்கும் வாய்ப்பு தராமல், ஆட்சியருக்கு முழு சுதந்திரம் அளித்து, நல்ல முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கச் செய்தமைக்காக அவருக்கும் பாராட்டுகள். ஒவ்வொரு மதத்தினரும் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தா்கள் வருகை தொடா்பாக பல தடுப்பு நடவடிக்கைகளை மனமுவந்து எடுத்துவருவது பாராட்டுக்குரியது.

இதன்மூலம் காரைக்காலில் கரோனாவின் தாக்கம் இருக்காது என்ற நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியரின் அனைத்து பணிகளுக்கும் திமுக துணை நிற்கும். புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, தக்க நேரத்தில் தக்க முடிவை எடுக்கும் வல்லமை கொண்டவராக செயல்படுவதோடு, கரோனா தடுப்பு விவகாரத்தில் அவரது பணிகள் சிறப்பாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com