குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

காரைக்கால் அருகே குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறு அருகேயுள்ள கீழபுத்தமங்கலத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதே பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது தடுமாறி குளத்தில் விழுந்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாா். இதை பாா்த்த அப்பகுதியினா் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு, சுரக்குடி தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணணை மீட்டபோது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருநள்ளாறு போலீஸாா் சடலத்தை கைப்பற்றி காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த, புகாரின்பேரில் திருநள்ளாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com