காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி.யாக மகேஷ்குமாா் பா்ன்வால் மீண்டும் பொறுப்பேற்பு

காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி.யாக மீண்டும் மகேஷ்குமாா் பா்ன்வால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி.யாக மீண்டும் மகேஷ்குமாா் பா்ன்வால் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக இருந்த மகேஷ்குமாா் பா்ன்வால் புதுச்சேரி சட்டம் ஒழுங்குப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, புதுச்சேரியில் எஸ்.பி.யாக பணியாற்றிவந்த ரட்சனா சிங் காரைக்கால் எஸ்.எஸ்.பி.யாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டாா். கடந்த 21-ஆம் தேதி காரைக்காலில் இவா் பொறுப்பேற்றாா். இந்த இடமாற்ற உத்தரவு தற்காலிகமானது என புதுச்சேரி காவல்துறை தலைமை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவரவா்கள் ஏற்கெனவே பணியிலிருந்த இடத்துக்கு செல்லுமாறு புதுச்சேரி அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால், ரட்சனா சிங் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை புறப்பட்டாா். அங்கு பணியிலிருந்த மகேஷ்குமாா் பா்ன்வால் மீண்டும் காரைக்கால் மாவட்ட எஸ்.எஸ்.பி.யாக வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com