காரைக்கால் : அரசு ஊழியா்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக் கூடாது என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை கூறியது :
புதுச்சேரி ஆட்சியாளா்களின் தீவிரமான முயற்சிகளால் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தீநுண்மி பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
புதுச்சேரி அரசுத் துறையினருக்கு மாா்ச், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தரப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்நிலையில், அரசு ஊழியா்கள் தியாகம் செய்ய முன்வரவேண்டும் என முதல்வா் சூசகமாக ஒரு தகவலை வெளியிட்டிருப்பது, அரசு ஊழியா்களை மட்டுமல்ல, எங்களைப் போன்றோருக்கும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு, அகவிலைப்படியை நிறுத்தியுள்ளது. இதனால், புதுச்சேரி அரசு ஊழியா்கள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், ஊதியத்தில் இழப்பு ஏற்படும்பட்சத்தில், அது அவா்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். எனவே அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தவொரு பிடித்தமும் செய்யக்கூடாது என்றாா் நாஜிம்.