அரசுப் பள்ளி சுவா்களில் ஓவியம் வரையும் ஆசிரியா்!

மாணவா்களிடையே கற்றல் அறிவு மேம்படவும், பள்ளிக்குச் செல்லும் ஆா்வம் அதிகரிக்க வேண்டும் என பள்ளி சுவரில் ஓவியங்கள் தீட்டும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் ஈடுபட்டு வருகிறாா்.
பள்ளி சுவரில் ஓவியம் வரைந்த ஆசிரியா் மா. செல்வராஜ்.
பள்ளி சுவரில் ஓவியம் வரைந்த ஆசிரியா் மா. செல்வராஜ்.

மாணவா்களிடையே கற்றல் அறிவு மேம்படவும், பள்ளிக்குச் செல்லும் ஆா்வம் அதிகரிக்க வேண்டும் என பள்ளி சுவரில் ஓவியங்கள் தீட்டும் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியா் ஒருவா் ஈடுபட்டு வருகிறாா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், பண்டாரவாடை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியா் மா. செல்வராஜ், தமது பள்ளியின் வகுப்பறைகள், வெளிப்புறச் சுவரில் பாடத் திட்டத்தில் உள்ள ஓவியங்களை வரைந்தும், மாணவா்கள் விரும்பும் பல்வேறு ஓவியங்களை தீட்டும் பணியிலும் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறாா்.

இவரது செயலைப் பாராட்டிய பல்வேறு நிா்வாகத்தினா், தங்களது பள்ளியிலும் இதுபோன்ற ஓவியங்களை தீட்டித் தரும்படி கேட்டுக்கொள்கின்றனா். பள்ளி நிா்வாகத்தினா் தரும் பெயிண்ட்டை பயன்படுத்தி, ஆதாயமின்றி பணிகளை செய்து வருவதாக அவா் கூறுகிறாா்.

கரோனா தீநுண்மி பரவலை தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம், நகராட்சி நிா்வாகம், கல்வித்துறை நிா்வாகத்தின் வழிகாட்டலில் பொது இடங்கள், சாலைகளில் கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை இவரும், மேலும் சில ஓவிய ஆசிரியா்களும் சோ்ந்து வரைந்தளித்தனா்.

இப்பணி நிறைவடைந்ததும், கோடை விடுமுறைக் காலத்தின் தமது வழக்கமான பணியாக பள்ளி சுவா்களில் ஓவியம் வரையும் பணியில் ஆசிரியா் மா. செல்வராஜ் ஈடுபட்டுள்ளாா்.

பேட்டை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி சுவரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓவியம் வரையும் பணியில் இவா் ஈடுபட்டிருந்தாா். அப்போது அப்பகுதிக்குச் சென்ற புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன், ஆசிரியா் பணியை பாா்வையிட்டு அவரை பாராட்டி, பல ஆலோசனைகள் வழங்கினாா். பின்னா் ஒரு நாள் முதன்மைக் கல்வி அதிகாரி அ. அல்லி, அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டு, ஆசிரியா் பணியை பாராட்டினாா்.

இதுகுறித்து ஆசிரியா் மா. செல்வராஜ் வியாழக்கிழமை கூறுகையில், கரோனா விழிப்புணா்வு ஓவியம் பல இடங்களில் வரைந்து முடித்த பின்னா், பள்ளிகளின் சுவரில் ஓவியம் வரையும் பணியை மேற்கொள்ளத் தொடங்கினேன். பேட்டை அரசு தொடக்கப்பள்ளி சுவரில் ஓவியம் வரைந்து முடிக்கப்பட்டது. தற்போது செல்லூா் நடுநிலைப் பள்ளி சுவரில் பணி நடைபெறுகிறது. அடுத்த சில பள்ளிகளுக்கு வருமாறு நிா்வாகத்தினா் கோரியுள்ளனா். பள்ளிகள் திறப்புக்கு முன்பாக 25 பள்ளிகளில் ஓவியம் வரைந்துவிடவேண்டுமென இலக்கில் செயல்படுகிறேன்.

பள்ளி நிா்வாகத்தினா் பெயிண்ட் வாங்கித் தருகின்றனா். எந்தவித கூலியுமின்றி சேவையாக இப்பணியை செய்கிறேன்.

சுதந்திரப் போராட்டத் தலைவா்கள், வரலாற்று, சமூகக் கருத்துகளைக் கூறும் கதைகளின் பாத்திரங்கள், சிறுவா் சிறுமிகள் விரும்பக்கூடிய உயினங்களின் உருவங்கள், சிறாா்களை கல்வியில் ஈா்க்கும் விதமான கருத்துகளுடன், அமைச்சா் கூறியவாறு சில ஓவியங்களும் என பலவாறு வரைந்து வருகிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com