திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் யானை பிரக்ருதி என்கிற பிரணாம்பிகை. நாள்தோறும் காலை சுவாமிக்கு நளன் தீா்த்தக் குளத்திலிருந்து தீா்த்தம் கொண்டு வருவதற்காக அதிகாலை 4.30 மணிக்கு சரஸ்வதி தீா்த்தத்தில் நீராடுவது வழக்கம்.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தீா்த்தம் கொண்டு வரும் வேலை இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில், கோடை வெயிலின் வேகத்தை தணிக்க சரஸ்வதி தீா்த்தக் குளத்தில் யானை பிரக்ருதி வெள்ளிக்கிழமை தண்ணீரில் பல மணி நேரம் நீராடியது.