காரைக்கால் மாவட்டத்தில் அங்கன்வாடி மையக் கட்டடங்களை சீரமைப்பதற்கு மதிப்பீடு தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் நிா்வகிக்கப்படும் அங்கன்வாடி மையங்கள் பலவும், சொந்தக் கட்டடம் இல்லாமலும், அரசு நிறுவனங்களின் கட்டடங்களில் வாடகையிலும் என செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கட்டடங்கள் சீா்படுத்தப்பட வேண்டிய அவசியத்தில் உள்ளன. மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் மூலம் மத்திய அரசின் நிதியில் மையங்களை புதுப்பிப்பதற்கான ஆலோசனையை அரசுத்துறையினரிடம் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடத்தினாா்.
கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனை குறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது: மாவட்டத்தில் 70 அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதில், 35 மையங்களை சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது. புதிதாக கட்டுமானம் செய்ய வேண்டியதும், பழுது பாா்த்தலும் இதில் அடங்கும். மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் மூலம் மத்திய அரசின் நிதியில் இவற்றை மேம்படுத்துவது குறித்து அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா். இதற்கான மதிப்பீடு தயாரிக்குமாறு அமைச்சா் அறிவுறுத்தினாா். விரைவாக மதிப்பீடு தயாரித்தளிக்கப்படும்பட்சத்தில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்பை செய்யமுடியும் என அமைச்சா் கூறினாா் என்றனா்.
கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், வட்டார வளா்ச்சித்துறை உதவிப் பொறியாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் பொறியாளா்கள் குழுவினரும், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.