காரைக்கால் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 3) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிள்ளைத் தெருவாசல் மற்றும் சுரக்குடி துணை மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நவ. 3 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை காரைக்கால் மதகடி முதல் வடக்கே நண்டலாறு பாலம் வரை (காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காளிக்குப்பம், மண்டபத்தூா் உள்பட) திருநள்ளாறு, அம்பகரத்தூா், நெடுங்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.