கரோனா 2-ஆவது அலைக்கு காரைக்கால் மக்கள் வாய்ப்பு தந்துவிடக்கூடாது எனவும், பண்டிகை காலத்தை மிகுந்த கட்டுப்பாடுகளுடன் கடக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா அறிவுறுத்தியுள்ளாா்.
காரைக்காலில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேவேளையில், கரோனா தொடா்பான எச்சரிக்கை மக்களின் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். உலகின் பல நாடுகளிலும், நாட்டில் சில மாநிலங்களிலும் கரோனா 2-ஆவது அலை எழுவதற்கு வாய்ப்பிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், பொது முடக்க தளா்வுகளை மக்கள் அலட்சியமாக கருதிவிடக் கூடாது. தீபாவளி பண்டிகை காலத்தில் கடைத்தெருவில் கூட்ட நெரிசல் மிகுதியாக இருக்கும். இது கரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகிவிடும். அது 2-ஆவது அலை எழுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்துவிடும். இதற்கு பொதுமக்கள் வாய்ப்பு தந்துவிடக் கூடாது. எனவே இயன்ற வரை தீபாவளிக்கு முன்பாகவே பொருள்களை வாங்கிக்கொண்டு கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிா்க்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.