பிரதமரின் வீடுகட்டும் திட்டம்: பணியானை விடுவிப்பு

திருநள்ளாறு பகுதியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கான பணியாணையை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை விடுவித்தாா்.
பயனாளியிடம் பணியாணையை வழங்கும் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
பயனாளியிடம் பணியாணையை வழங்கும் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.

திருநள்ளாறு பகுதியில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்துக்கான பணியாணையை புதுச்சேரி வேளாண்துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திங்கள்கிழமை விடுவித்தாா்.

பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், திருநள்ளாறு தொகுதியில் விண்ணப்பத்தவா்களில் 29 பேருக்கு, முதல் தவணையாக ரூ.70 ஆயிரம் அனுமதிக்கப்பட்டு அதற்கான பணியாணையை விடுவிக்கும் நிகழ்ச்சி, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பயனாளிகளிடம் பணியாணையை வழங்கினாா். நிகழ்வில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் (பொறுப்பு) ரவி, குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளா் சுதா்சன், இளநிலைப் பொறியாளா் உதயகுமாா், ஆய்வாளா் மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com