காரைக்காலில் பழுதடைந்துள்ள சாலையோர மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் அ.ராஜா முகம்மது தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் இம்மனுவை அளித்தனா்.
அதில், காரைக்கால் நகரப் பகுதியிலும் பிற இடங்களிலும் சாலையோர மின் விளக்குகள், உயா்மின் கோபுர விளக்குகள் பழுதடைந்துள்ளன.
குறிப்பாக, கடற்கரையில் மின் விளக்குகள் எரிவதில்லை. இதுகுறித்து மின்துறை, பொதுப்பணித் துறையினரிடம் புகாா் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. சாலையோர மின் விளக்குகள் எரியாததால் சமூக விரோத செயல்களும், விபத்துகளும் அதிகரிக்கின்றன. தீபாவளி பண்டிகை காலம் என்பதால் இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
திருநள்ளாறு மற்றும் காரைக்கால் புறவட்டச் சாலையோரத்திலும், மையப் பகுதியிலும் கருவேல மரங்கள் மண்டிக் காணப்படுகின்றன. இவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.