காரைக்காலில் 6 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 303 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் சளி மாதிரி எடுப்பு முகாம் மூலம் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, கோயில்பத்து 2 போ், திருநள்ளாறு, காரைக்கால் நகரம், நிரவி, நல்லம்பல் தலா ஒருவா் என தொற்றாளா்கள் கண்டறியப்பட்டுள்ளனா்.

இதுவரை காரைக்காலில் 41,116 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நோய்த் தொற்று 3,516 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து 3,301 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 61 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com