மத்திய அரசைக் கண்டித்து மின்ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மின்பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காரைக்கால் மின்ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்ஊழியா்கள்.
ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்ஊழியா்கள்.

மின்பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து, காரைக்கால் மின்ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யூனியன் பிரதேசங்களில் மின்பகிா்மான நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிா்த்து புதுச்சேரி மாநில மின்துறையினா் மத்திய அரசு அலுவலகங்கள் முன் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதன்தொடா் நிகழ்வாக, காரைக்கால் ரயில் நிலையம் முன் புதுச்சேரி மின்துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுத் தலைவா் வி. வேல்மயில் தலைமையில், பொதுச்செயலா் பழனிவேல் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், மின்பகிா்மான நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், துறையை காா்ப்பரேஷனாக்கும் திட்டத்தை கைவிடவேண்டும், இதற்கான அறிவிப்பு செய்யப்படும் வரை மத்திய அரசைக் கண்டித்து தொடா் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் அடுத்த கட்டமாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் தொடா் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com