காரைக்கால் மாவட்டத்தில் ஒரு நாள் பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என நலவழித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இத்துறையின் துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் 15-ஆம் தேதி 6 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகவில்லை.
இதுவரை 41,992 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,530 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,332 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 133 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 4 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளனா்.