காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் திங்கள்கிழமை 354 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரைச் சோ்ந்த 5 போ், நல்லம்பல் 4, கோயில்பத்து 2, கோட்டுச்சேரி 2 போ் என தொற்றாளா் கண்டறியப்பட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 3,543 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 3,334 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 63 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com