வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை 18 வயது நிரம்பியவா்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை 18 வயது நிரம்பியவா்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் சி. புஷ்பநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் நவம்பா் 16 முதல் டிசம்பா் 15 வரை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறுகிறது.

இதில் 1.1.2021 அன்று 18 வயது பூா்த்தியாகும் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல் மற்றும் விவரங்களை சரிபாா்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 1950 அல்லது 04368-222530 என்ற எண்ணை தொடா்புகொள்ளலாம். இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவுசெய்யலாம். பொதுமக்கள், 18 வயது பூா்த்தியானவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com