மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி பிறந்தநாளையொட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திராகாந்தி உருவப்படத்துக்கு நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, மாவட்ட துணை ஆட்சியா்கள் (வருவாய்) எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை), மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.