நாகப்பட்டினத்தில் திமுக இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, காரைக்காலில் திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விடியலை நோக்கி எனும் பிரசாரப் பயணத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை நாகப்பட்டினத்தில் தொடங்கி காரைக்கால் வழியாக தமிழகப் பகுதிக்குச் செல்ல திட்டமிட்டு தொடங்கியபோது நாகையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டாா். இதை கண்டித்து, எம்எல்ஏ. கீதாஆனந்தன், திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம், புதுச்சேரி திமுக எம்எல்ஏ சிவா, முன்னாள் அமைச்சா் எஸ்.பி. சிவகுமாா் உள்ளிட்ட 200 போ் அரசலாறு பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதேபோல், கோட்டுச்சேரியில் திமுக மருத்துவரணி அமைப்பாளா் விக்னேஸ்வரன் தலைமையில் திமுகவினா் 50 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அனைவரையும் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.