காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 28-ஆம் தேதி 346 பேருக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம் மூலம் பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, திருநள்ளாறு 4, கோட்டுச்சேரி 2 என 6 பேருக்கு தொற்று உறுதியானது.
காரைக்காலில் இதுவரை 46,045 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,618 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,439 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 113 போ், காரைக்கால் மருத்துவமனை தீவிர சிகிச்சையில் 4 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 63 போ் உயிரிழந்துள்ளனா்.