முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்காலில் 21 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 04th October 2020 08:40 AM | Last Updated : 04th October 2020 08:40 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், 2 போ் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சனிக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு 1, திருநள்ளாறு 7, நிரவி 3, வரிச்சிக்குடி 2, திருப்பட்டினம் 2, நல்லம்பல் 3 என 21 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகப் பகுதியைச் சோ்ந்த 83 வயது ஆண் கடந்த 1 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தாா். கடந்த 1 ஆம் தேதி இறந்த நிலையில் கொண்டுவரப்பட்ட நிரவியைச் சோ்ந்த 60 வயது ஆணுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதுவரை 2,678 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2004 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்தோா் 3 போ், காரைக்கால் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோா் 541 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 29 போ், தீவிர சிகிச்சையில் 9 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 37 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 12 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 45 போ் உயிரிழந்துள்ளனா்.