காரைக்காலில் அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்பு

காரைக்காலில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்களை போலீஸாா் மீட்டுள்ளனா்.

காரைக்காலில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத 2 ஆண் சடலங்களை போலீஸாா் மீட்டுள்ளனா்.

காரைக்கால் நகரம் காமராஜா் சாலையில் கடந்த 10 ஆம் தேதி சுய நினைவின்றி கிடந்த 70 வயது ஆண், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 11 ஆம் தேதி உயிரிழந்தாா். திருப்பட்டினம் மேலவாஞ்சூா் சாலையில் 60 வயது ஆண் கடந்த 12 ஆம் தேதி இறந்துகிடந்தாா்.

இவா்கள் இருவா் குறித்த விவரம் தெரியவில்லை. இதுகுறித்து நகரக் காவல் நிலைய போலீஸாரும், திருப்பட்டினம் காவல் நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com